Thursday, October 31, 2019

என்னோட மெஷின் பெரியது.. சுஜித் விழுந்த குழி குறுகலானது.. வருத்தமாக இருக்கிறது.. மதுரை மணிகண்டன்

அமெரிக்கா சுதாரித்தது.. இந்தியா சுர்ஜித்தை இழந்தது

மதுரை: "நான் வைத்துள்ள ரோபாட்டிக் மெஷின் சற்று பெரியது. காரணம் பெரும்பாலான போர்வெல் குழிகளின் அகலத்தை வைத்துத்தான் நான் அப்படி டிசைன் செய்துள்ளேன். ஆனால் சுஜித் விழுந்த போர்வெல் இடைவெளியே இல்லாமல் குறுகியதாக இருந்தது" என்று மதுரை மணிகண்டன் கூறியுள்ளார்.

போர்வெல் குழிகளில் விழும் குழந்தைகளை மீட்பதற்காகவே சிறப்பு ரோபாட்டிக் மெஷினை உருவாக்கியவர் மதுரை மணிகண்டன். இதை வைத்து பல மீட்பு முயற்சிகளுக்கு அவர் உதவி வருகிறார். சங்கரன்கோவிலில் ஒரு குழந்தையை மீட்க பெரும் உதவி புரிந்தவர் மணிகண்டன்.
சுஜித் மீட்பு முயற்சிகளிலும் கூட மணிகண்டன் தான் ஆரம்பத்தில் ஈடுபட்டார். திருச்சி கலெக்டரின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாக திருச்சி விரைந்த அவர் நடுக்காட்டிப்பட்டியில் சுஜித்தை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவரால் சுஜித்தை மீட்க முடியாமல் போய்விட்டது.


சிக்கல்
ஏன் இந்த சிக்கல் என்பது குறித்து மணிகண்டன் கூறுகையில், "வழக்கமான போர்வெல் குழிகளின் அகலத்தை அடிப்படையாக வைத்துத்தான் எனது ரோபாட்டிக் மெஷினை நான் டிசைன் செய்துள்ளேன். உள்ளே சிக்கியிருக்கும் குழந்தைகளை அப்படியே கவ்விப் பிடித்து எனது ரோபாட்டிக் மெஷின் மூலம் மேலே கொண்டு வந்து விட முடியும்.


இடைவெளி
இதே முறை மூலமே சுஜித்தை மீட்கவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டோம். ஆனால் என்ன சிக்கல் ஏற்பட்டது என்றால் சுஜித் விழுந்து கிடந்த இடம் போதிய இடைவெளி இல்லாமல் குறுகலாக இருந்தது. இதனால் எனது மெஷினால் போக முடியவில்லை. அந்த சமயத்தில் எனது மெஷினால் எளிதில்தூக்கி விடக் கூடிய தூரத்தில்தான் சுஜித் இருந்தான்.

பலன் தரவில்லை
ஆனால் மெஷின் அகலமாக இருந்ததால் அவனை நெருங்க முடியவில்லை. இதையடுத்து லேத்துக்குச் சென்று மெஷினின் அகலத்தைக் குறைத்தோம். பின்னர் மீண்டும் முயற்சிகளில் இறங்கியபோது 26 அடியிலிருந்த குழந்தை 80 அடியைத் தாண்டி போய் விட்டது. இதனால் எனது முயற்சிகள் பலன் தராமல் போய் விட்டன.




விருப்பம்
இது எனக்கு வருத்தம் தருகிறது. போர்வெல் அகலம் வேறுபடுவதை உணர்ந்துள்ளேன். இனி அதற்கேற்றார் போல பல்வேறு அளவுகளில் எனது மெஷினை வடிவமைக்கவுள்ளேன். ஆனால் எனது விருப்பம் என்னவென்றால், எனது கருவிகளை பயன்படுத்தும் சூழலே வரக் கூடாது. அப்படிப்பட்ட பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நேரம் இது என்றார் மணிகண்டன்.
மணிகண்டன் முயற்சி தோற்றாலும் கூட கடைசி வரை அந்த இடத்திலேயே இருந்து மீட்புப் படையினருக்கு உதவியபடியேதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 30, 2019

கொல்லிமலையில் காக்கப்படும் இரகசியம்……

Kollimalai hills : 21ம் நுாற்றாண்டின் நவீன உலகத்திலும் பல இரகசியங்களை உள்ளடக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தும் முக்கிய பகுதியாக கொல்லிமலை உள்ளது.


 நுாற்றாண்டின் நவீன உலகத்திலும் பல இரகசியங்களை உள்ளடக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தும் முக்கிய பகுதியாக கொல்லிமலை உள்ளது.
இது ஆன்மீக பூமி, மலைச் சுற்றுலாவுக்கு ஏற்ற பகுதி, மூலிகைச் செடிகள் நிறைந்த மலை என்று பல பெயர் இருந்தாலும், பல புரியாத புதிர் நிறைந்த இடமாகவும் அது அறியப்படுகிறது. புராண காலம் முதல் இன்று வரையில் இங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது.


இத்தோடு நம்மை மேலும் சிந்திக்க வைக்கும் மற்றொரு செய்தியும் இங்கு உள்ளது அதாவது இங்கு இருக்கும் சித்தர்களுக்கு கூடு விட்டு கூடு பாயும் கலை தெரியுமாம். இந்த கலை தெரிந்த சித்தர்கள் இன்றும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
மேலும் இங்கு இருக்கும் ஓர் அபூர்வ மூலிகையை உட்கொண்டால் மனிதர்கள் மாயமாக மறைந்துவிடுவார்களாம். அதை உண்டுதானாம் சித்தர்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்றனராம்.
மேலும் இங்கு சுடர்விட்டு எரியக்கூடிய ஜோதிப் புல் என்ற வகை செடி ஒன்று உண்டு. அதை பயன்படுத்தி தான் சித்தர்கள், குள்ளர்கள் தங்களது குகைகளில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. சித்தர்கள் வாழ்ந்த, வாழும் குகைகளை இன்றும் இங்கு பார்க்கலாம். ஆனால் அதற்குள் போகவேண்டாம் என எச்சரிக்கின்றனர் இந்த பகுதி மக்கள்.

Monday, October 28, 2019

Sujith has left his mother and went to Earth Mother's womb. Failed to save the baby.

That baby

The life of Sujith


The child had left his mother and us. He stayed in the earth mother's womb for 3 days.

The little boy Sujith had been in the dark for three days, hoping that his mother and others would save him.



As a child, he was afraid of the darkness, but he was more afraid of the darkness that the boy Sujith saw in his mother's womb these three days.

After three days of rescue work, the boy did not survive. There is more of a lack of demand in this country than there is a need.

We have the technology to see if there is water on Mars but there is nothing to save a child who has fallen into a deep well.

Baby Sujit says goodbye to us. He left everyone in distress. He would have thought that when he died, there were so many around him that he failed to save me.
Now we will cover it so that no child falls into the deep well.

Don't worry Sujith is leaving the world. We are waiting for you to be born again in your mother's womb.

நமது பிராத்தனை அனைத்தும் வினாகிவிட்டதே..சிறுவன் சுஜித் தன்னுடைய தாயை விட்டு பிரிந்து பூமி தாயின் கருவறைக்கு சென்று விட்டான்

அந்த பச்சிளம் குழந்தை
சுஜித் உயிர்


அந்த குழந்தை சுஜித் அவனது தாயையும் நம்மையும் விட்டு பிரிந்து சென்று விட்டான். அவன் பூமி தாயின் கருவறையில் 3 நாட்களாக இருந்து வந்தான். 

தனது தாயும் மற்றவர்களும் தன்னை எப்புடியவது காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த சிறு குழந்தை சுஜித் 3 நாட்கள் அந்த இருள் சூழ்ந்த இடத்தில் எவ்வளவு படத்தோட இருந்திருபான்.



குழந்தை என்றாலே இருள் கண்டு பயப்படும் ஆனால் சிறுவன் சுஜித் தனது தாயின் கருவறையில் பார்த்த இருளை விட இந்த மூன்று நாட்கள் பூமி தாயின் கருவில் இருந்த இருளை கண்டு அவன் மிகவும் பயத்தோடு இருந்திருபான்.

3 நாட்கள் மீட்பு பணி நடந்தும் அந்த சிறுவனின் உயிர் காப்பாற்ற பட வில்லை. இந்த நாட்டில் தேவையானதை விட தேவை இல்லாதது தான் அதிகம் உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்க நம்மிடம் தொழில்நுட்பம் உள்ளது ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற எதுவும் இல்லை.

குழந்தை சுஜித் நம்மிடம் இருந்து கண்ணீருடன் விடை பெற்றுவிட்டான். எல்லோரையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டான். அவன் உயிர் பிரியும் போது சுற்றி இத்தனை பேர் இருந்தும் என்னை காப்பாற்ற தவறி விட்டிர்களே என்று நினைத்திருப்பான்.


இனியாவது எந்த குழந்தையும் ஆழ்துளை கிணற்றுள் விழாத வாறு அதனை நாம் மூடி வைப்போம். 

சுஜித் உலகை விட்டு பிரிந்து செல்கிறோம் என்று வருந்தாதே. நீ மீண்டும் உன் தாயின் கருவில் பிறந்து வா உனக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

On the one hand is a thrilling rescue mission ... On the other hand Sujith is counseling parents

Sujith's fall to about 1 foot sand.


Trichy: The child's parents are being counseled as the rescue operation is being carried out to recover Sujith who fell into a deep well in the Nudukatuppattu bar near Manapparai.

Mothers of Tamil Nadu have been waiting for the last four days whether baby Sujith will not be rescued.

Many mothers are fervently praying for the recovery of Sujith without any water as seen on the television in the home reception.

Rescue Force intensity

It has been 72 hours since the boy Sujith fell into the deep well. But nature has yet to recover him. All the best efforts are being made on the part of the government.


Helplessness

Since the fall of Sujith's deep well on Friday evening, his parents, especially the mother of the child, have cried and her tears have dried up. So much so that he remembers his son.


Counseling

Sujit Thayar's cries have caused the occupation of those on the ground. Counseling is provided by psychologists from Trichy. Field reality is thus made known to them.


Police chase

People have been invading the city for a while. As a result, the police are chasing them away, leaving no one near the rescue site.


 The focus of the police

Police are increasingly concentrating on security work as rescue operations have reached the final stage. Moreover, political party leaders have been forced to look into their security arrangements as they change.

ஒரு புறம் பரபரக்கும் மீட்பு பணி... மற்றொரு புறம் சுஜித் பெற்றோருக்கு கவுன்சிலிங்

சுஜித் மீது சுமார் 1 அடி அளவுக்கு மண் சரிவு.. மீட்பு பணியில் பின்னடைவு..!


திருச்சி: மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க மீட்பு பணிகள் பரபரப்பாக நடக்கும் சூழலில், அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு கவுன்சிலிங்கும் அளிக்கப்படுகிறது.

குழந்தை சுஜித் எப்படியாவது மீட்கப்படமாட்டானா என கடந்த நான்கு நாட்களாக தமிழகத் தாய்மார்கள் தவித்து வருகிறார்கள்.
வீட்டின் வரவேற்பறைகளில் செய்தித் தொலைக்காட்சிகளை பார்த்தவாறே அன்னம் தண்ணீரின்றி சுஜித்தை மீட்பதற்காக எத்தனையோ தாய்மார்கள் உருக்கமுடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


மீட்புப் படை தீவிரம்

ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்து சுமார் 72 மணி நேரங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவனை மீட்பதற்கு இயற்கை இன்னும் வழிவிடவில்லை. அரசு தரப்பில் ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தவிப்பு

சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் அவனது பெற்றோர் அதுவும் குறிப்பாக அந்தக் குழந்தையின் தாய் அழுது அழுது அவரது கண்ணீரே வறண்டு விட்டது எனக் கூறலாம். அந்தளவுக்கு மகனை நினைத்து கதறி ஓலமிட்டு வருகிறார்.


கவுன்சிலிங்
சுஜித் தாயாரின் அழுகை அங்கு களத்தில் இருப்பவர்களை பதைபதைக்க செய்துள்ளது. இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்றுள்ள உளவியல் நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கள யதார்த்தம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

போலீஸ் விரட்டியடிப்பு
நடுக்காட்டுப்பட்டியை ஏதோ சுற்றுலா தலம் போல் கருதி, சாரை சாரையாக மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் போலீஸார் அவர்களை மீட்புப் பணி நடைபெறும் இடத்தின் அருகே யாரையும் விடாமல் விரட்டி அடித்து வருகின்றனர்.

போலீஸ் குவிப்பு
மீட்புப் பணிகள் இறுதிகட்டத்தை நோக்கி சென்றுள்ளதால், அங்கு போலீஸ் அதிகளவில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் மாறி மாறி வந்து செல்வதால் அவர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாட்டையும் போலீஸ் கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Sunday, October 27, 2019

What is Sujit's current position? 10 Important Information #BBCGroundReport

The 2-year-old child, Sujith, who was playing in the garden of his house in Nirukkadupatti near Manapparai in Trichy district, has fallen into a well and is in the process of rescuing the child.

We have compiled the current field situation into 10 key information.

1. It is estimated that the boy Sujith was trapped at about 80 to 90 feet. Also, the boy's hands are held (air lock) so as not to go down.

2. The boy drilled a new hole with rig machines about 3 meters away from the deep well. The cavity is about 1 meter in diameter.

3. The first excavated rig has been damaged and a more powerful rig has been introduced. Work on fitting the parts of that machine is ongoing.

4. One of the main reasons for rig rigging is the presence of rocks at the site. The teeth of the rig machine are damaged because the rocks are 10 feet deep.

5. Disaster recovery crews are planning to dig a newly dug deep hole at about 100 feet.

6. After digging a hundred meters, the boy is to drill towards the pit where Sujith fell. The fire department is ready to carry out this task.

7. Two firefighters enter the newly dug pit and do the drilling work to get the boy to the pit.

8. About 70 people are involved in this rescue mission.

9. When Sujith is recovered, the medical team is ready to take him to the hospital immediately.

10. Excavation work is expected to continue until the early hours

சுஜித்தின் தற்போதைய நிலை என்ன? 10 முக்கிய தகவல்கள் #BBCGroundReport

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தற்போது அங்குள்ள கள நிலவரத்தை 10 முக்கிய தகவல்களாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
1. சிறுவன் சுஜித் சுமார் 80 லிருந்து 90 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கீழே சென்றுவிடாமல் இருக்க சிறுவனின் கைகள் பிடித்து (ஏர் லாக்) வைக்கப்பட்டிருக்கின்றன.
2. சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து சுமார் 3 மீட்டர் தூரத்தில் ரிக் இயந்திரங்கள் கொண்டு ஒரு புதிய துளை போடப்படுகிறது. அந்த குழி ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு 1 மீட்டர் விட்டம் உடையதாகதோண்டப்படுகிறது.
3. முதலில் குழித் தோண்டிய ரிக் இயந்திரம் பழுதடைந்துவிட்டதால் மேலும் ஒரு சக்தி வாய்ந்த ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தின் பாகங்களை பொருத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
4. ரிக் இயந்திரம் பழுதானதற்கு ஒரு முக்கிய காரணம் புதிதாக தோண்டப்படும் இடத்தில் இருக்கும் பாறைகள். 10 அடி ஆழத்திலேயே பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தின் பற்கள் சேதம் அடைந்துள்ளன.
5. புதிதாக தோண்டப்படும் ஆழ்துளை கிணறு சுமார் 100 அடிக்கு தோண்ட பேரிடர் மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
6. நூறு மீட்டர் தோண்டியவுடன் பக்கவாட்டில் சிறுவன் சுஜித் விழுந்த குழியை நோக்கி டிரில் செய்யப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

7. புதிதாக தோண்டப்படும் குழியில் 2 தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே சென்று சிறுவன் அகப்பட்டிருக்கும் குழிக்கு செல்வதற்கான டிரில்லிங் வேலையை செய்ய உள்ளனர்.
8. இந்த மீட்புப்பணியில் சுமார் 70 பேர் ஈடுபட்டுள்ளனர்.
9. சுஜித் மீட்கப்பட்டவுடன் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கு தயார் நிலையில் மருத்துவ குழு இருக்கிறது.
10. தற்போது குழி தோண்டும் பணி அதிகாலை வரை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

சிறுவன் சுர்ஜித் சுவாசித்து வருகிறார்... சிறுவனை மீட்பதில் தாமதம் ஏற்படும் என தகவல்

சிறுவன் சுர்ஜித்தை காப்பாற்றுவதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகே தோண்டப்படும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் மீட்புப் பணி மெதுவாக நடக்கிறது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க 2 நாட்களாக மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் ரிக் என்று சொல்லக் கூடிய அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்



ஆழ்துளை கிணற்றுக்கு அருகே புதிதாக தோண்டப்படும் துளை வழியாக குழந்தையை மீட்க திலிப்குமார், அம்ணிகண்டன், கண்ணதாசன், நகைமுகன், ராம்குமார், அபிமன்னன், தனுஷ் ஆகியோர் தயார் நிலையில் உள்ளிட்ட 7 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

7 தியணைப்பு வீரர்களில் ஒருவர் மட்டும் கீழே இறங்கி குழந்தையை மீட்க உள்ளார். சுவாச கருவிகள் மற்றும் பாதுகாப்புடன் தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறக்கி விடப்படுவார்கள்

சிறுவன் சுர்ஜித்தை மீட்பதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. புதிதாக துளையிடப்படும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் பணி மெதுவாக நடக்கிறது

Saturday, October 26, 2019

ONGC's ultra-modern rig machine worth Rs 8 crore

Surjit, the boy who went deep ... Rescue mission intensity



Trichy: ONGC's rig machine worth Rs 8 crore







Sujith, a 2-year-old boy, fell into a well in Deepukkapatti village near Trichy. Sujith, who was stranded at 30 feet due to setbacks in the rescue operation, is now down to 85 feet.







Officials are now working on a new technology to help the child recover. Rescue operations have begun by sending 3 firefighters inside the ditch, digging another ditch near the well.

The crater was dug about three meters from the deep well. The ONGC of the government of India is called Rig. The cost of this sophisticated device is only Rs 8 crore. As much as that…




கீழடி ஸ்பெஷல்: 15 லட்சம் ஆண்டுகள் பழமையான அத்திரம்பாக்கம்

அத்திரம்பாக்கம் சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கொற்றலையாறு தற்போது ஓடுகின்றது. இங்கு கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் பழமையான வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய கல் கருவி கலாசாரத் தளமாக இவ்விடம் உள்ளது.

தொல்பழங்காலம்
தொல் பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தையக் காலமாகும். இக்காலம் கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலம் மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு மனித குல வரலாற்றை அறிவது தொல் பழங்கால வரலாறு ஆகும். தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனம் கற்கால மனித இனம் என்று என்று அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி மனிதன் உணவைத் தேடினான். மனித குல வாழ்விற்கு கற்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டதாலும், அவைகளை வேட்டையாடுவதற்கேற்ற கருவிகளாக மாற்ற மனிதன் முதலில் சிந்திக்கத் தொடங்கியதாலும் அக்காலம் கற்காலம் என அழைக்கப்படுகிறது.



தமிழகத்தில் அத்திரம்பாக்கம் என்ற இடம் தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

தமிழகத்தில் அத்திரப்பாக்கம், குடியம், பரிகுளம், பல்லாவரம் உள்ளிட்ட பல தொல் பழங்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. தொல் பழங்கால மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு இவ்விடங்களை அகழாய்வு செய்வதன் மூலம் தமிழக தொல் பழங்கால வரலாற்றை அறிய இயலுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் பரிகுளம் என்னும் தொல் பழங்கால வாழ்விடத்தை அகழாய்வு செய்ததன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் தொல் பழங்காலம் தொடங்கியதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய பல தொல் பழங்கால இடங்களை கண்டறிந்து அகழாய்வு செய்வதன் மூலம் இக்காலத்தை இன்னும் முன்னதாக கொண்டு செல்ல வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.


1863-1866 காலகட்டத்தில் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் கண்டறிந்தனர்.


அத்திரம்பாக்கத்தில் கே.டி.பானர்ஜி, சாந்தி பப்பு போன்ற அறிஞர்கள் அகழாய்வு செய்துள்ளனர். அகழாய்வு என்பது ஒரு இடத்தை முறையாகத் தோண்டி அங்கு கிடைக்கும் தொல்பொருட்களைப் பதிவு செய்து, சேகரித்து ஆராய்வதாகும். சாந்தி பப்பு அண்மையில் செய்த ஆய்வுகளின் வழியாக இந்த இடம் சுமார் 15 லட்சம் வருடங்களுக்கும் மேல் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 




இந்த இடத்தில் செய்த அகழாய்வுகளின் வழியாகக் கீழைப் பழங்கற்காலம் (Lower Palaeolithic period), இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic period), மேலைப் பழங்கற்காலம் (Upper Palaeolithic period) மற்றும் இடைக்கற்காலம் (Mesolithic period) (நுண்கற்கருவிக் காலம், Microlithic period) ஆகிய காலத்தைச் சேர்ந்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
ஆற்றுப்படுகையில் கிடைக்கும் குவார்சைட் (quartzite) எனப்படும் ஒரு வகை உருமாறிய கல் (metamorphic rock) வகைகளை, இவர்கள் கற்கருவிகள் செய்யப்பயன்படுத்தி உள்ளனர். இக்கற்கள் கிடைக்காத இடங்களில், சுண்ணாம்புக்கல், கிரானைட் போன்ற கற்களையும் பயன்படுத்தியுள்ளனர். 


இவர்கள் செய்த கருவி கைக்கோடரி என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு அச்சூலியன் கருவி என்ற பெயரும் உண்டு. இக்கருவி வெட்டுவதற்கும், குழி தோண்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இக் கருவிகளை அவர்கள் கூழாங்கற்களைப் பயன்படுத்தி மிக அழகாகச் செதில்களை உடைத்து எடுத்துச் செய்துள்ளனர். இவர்கள் கிளீவர் எனப்படும் வெட்டும் கருவியையும்; பிற்காலத்தில் சுரண்டிகள் மற்றும் பிற கருவிகளையும் பயன்படுத்தினர்.


அத்திரம்பாக்கம் என்ற இடம் ஒரு தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. 


இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. அத்திரம்பாக்கம் சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கொற்றலையாறு தற்போது ஓடுகின்றது. இங்கு கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கின்றன. இந்த இடம் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகிய நிலப்பொதியியல் வல்லுனர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

For SBI account holders, 3 things that change from today

3 things will change for SBI customers from today, 1st January 2020 So, if you are an SBI customer, you need to be aware of these changes...