மகாராஷ்டிரா மாநிலத்தில், மலைப்பாம்பு ஒன்று மானை அடித்துக்கொல்லும் காட்சி பதிவான வீடியோ வெளியாகி, பலரையும் அதிரவைத்துள்ளது.
தண்ணீர் பருக, மான்கள் கூட்டம் நீர்ப்பிடிப்புப் பகுதியை நோக்கி வருகின்றன. அதில், நான்கு மான்கள் தண்ணீரைப் பருகுகின்றன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், தண்ணீரில் மறைந்திருந்த மலைப் பாம்பு ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு மானைப் பிடித்து அடித்துச் சுழற்றுகிறது. இதை எதிர்பாராத அந்த மான், மலைப்பாம்பின் பிடிக்குள் முழுவதுமாக அடங்கிவிடுகிறது.
மிரட்டலான இந்த வீடியோ, வனத்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் சிக்கியுள்ளது. இதை வனத்துறை அதிகாரி சுஸ்ஷான்டா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ, சமூக தளத்தில் அதிக அளவில் பகிரப்படுகிறது. இதற்கான கமென்ன்டுகளும் குவிகின்றன. அதில், “இந்த வீடியோவைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இயற்கையைப் பார்க்கும்போது ஒரு பக்கம் பயமாகவும், மறுபக்கம் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது'' என்பன போன்ற கமென்ன்டுகளை நெட்டிசன்கள் பதிந்துவருகின்றனர்.
No comments:
Post a Comment